Wednesday, June 23, 2010

விஜய் - சீமான் படம் உறுதி

விஜய் - சீமான் இருவரும் இணைந்து படம் செய்வார்கள் என்ற கதை நீண்ட காலமாகவே அடிபட்டு வந்தாலும் விஜய் தொடர்ச்சியாக வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றார். தற்போது 'காவல்காரன்" படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்தாக 'வேலாயுதம்" படத்தில் நடிப்பார் என்ற அறிவிப்புக்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 'த்ரீ இடியட்ஸ்" படத்தில் நடிப்பார் என்ற கதையும் இருந்து வருகின்றது. இந்நிலையில் சீமான், விஜயின் படத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.


தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்த சீமான், அண்மையில் தனியாக கட்சி ஒன்றையும் ஆரம்பித்திருந்தார். ஆனாலும் அவ்வப்போது சினிமா நிகழ்வுகளிலும் தலை காட்டி வந்தார். இறுதியாக 2008ஆம் ஆண்டு மாதவன் - பாவனா இருவரையும் வைத்து 'வாழ்த்துக்கள்" என்ற படத்தை இயக்கியிருந்தார். பின்னர் இடையே ஒரு சில திரைப்படங்களிலும் தலை காட்டியிருந்தார். அரசியலில் அதி தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் சினிமா மீது கொண்ட பற்று அவரை விட்டு என்றுமே நீங்கியதில்லை.


இந்த நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் படமொன்றை இயக்க தயாராகின்றார். படத்திற்கான தலைப்பாக 'கோபம்" எனப் பெயரிட்டிருக்கிறார்களென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்தில் நாயகனாக விஜய் நடிக்க இருக்கின்றார். மிகவும் ஆக்ரோஷம் மிக்க ஒரு இளைஞனின் வாழ்க்கையை தனக்கே உரித்தான பாணியில் தரக் காத்திருக்கின்றார் சீமான். (ஏற்கனவே தம்பி படமும் அவ்வாறான ஒரு இளைஞனின் கதையே!) நிச்சயம் இந்தக் கதை இளைஞர்களை பாதிக்கும் என்ற நம்பிக்கையில் சீமான் களமிறங்கியுள்ளார். இந்த பிரவேசம் சீமானின் அரசியல் வாழ்க்கைக்கோ, அல்லது விஜயின் (தந்தையின்) அரசியல் வாழ்க்கைக்கோ உறுதுணையாகவும் அமையக் கூடும்.

இந்த செய்தியை அண்மையில் சீமான் உறுதி செய்துள்ளார். படத்தை வி.கிரியேஷனல் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்க்கு சச்சின் படத்தையும் தயாரித்தவர். செழியன் ஒளிப்பதிவு இயக்குனராக கடமையாற்றவுள்ளார்.

விஜய் 37வது பிறந்த நாள் : கல்வி உதவி வழங்கி கொண்டாட்டம்

22/06/2010 தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளில் சமூக பணிகள் செய்ய வேண்டும்.

நகரம் முதல் குக்கிராமம் வரை மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று தன் ரசிகர்களுக்குக் கூறி வரும் விஜய், ஏராளமான ஏழைகளுக்கு இன்று தன் கையால் உதவிகள் வழங்கினார்.

குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு அதிக கல்வி உதவிகளை அவர் வழங்கினார்.

பிறந்தநாளையொட்டி இன்று சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் விஜய். காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்ததானம் வழங்கினர்.

காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 11 மணிக்கு சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்லத்திற்கு சீருடைகள் வழங்கினார்.

ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவருக்கு பி.ஈ.வரை படிப்பதற்கான அனைத்து உதவிகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

கம்ப்யூட்டர் கல்வியில் தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.

விஜய் தலைமை நற்பணி இயக்க அலுவலக வாசலில் நடந்த அன்னதானம், மதியம் 12 மணிக்கு சாலிகிராமம் காவேரி பள்ளியில் நடந்த அன்னதானம், மதியம் 12.30 மணிக்கு சின்மயா நகர் முதியோர் இல்லத்தில் நடந்த அன்னதானம் போன்றவற்றிலும் பங்கேற்றார் விஜய்.

சென்னை மாநகரில் ஈரத்ததானம் வழங்கிய 370 பேருக்கும் நற்பணிகள் செய்த 40 பேருக்கும் சான்றிதழ், புகைப்படங்களை இன்று மாலை 6 மணிக்கு ஷோபா மண்டபத்தில் வழங்குகிறார் விஜய்.

இதேபோன்ற நற்பணி நிகழ்ச்சிகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றன.

பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Viajy Birthday Celebrations







Vijay Birthday Celebrations 7







Vijay Birthday Celebrations 6







Vijay Birthday Celebrations 5







Vijay Birthday Celebrations 4